tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன்

மே 23
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் சிறப்புறச் செயலாற்றியவர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன்.

மெட்ராஸ் ஸ்டேட்டிற்குத் ‘தமிழ்நாடு’ பெயிரிடக் கோரிப் போராடி தடியடிபட்டு ரத்தம் சிந்திய தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன்.நாட்டு விடுதலைக்காகவும் மக்கள் நல்வாழ்வுக்காகவும் சிறைவாசம் செய்தவர். துப்பாக்கிக் குண்டுகள் குறிபார்த்த போதும் இயக்கத்தையே சரிபார்த்தவர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன்.

நெசவாளர்களின் துயரங்கள் குறித்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனின் இயக்கக் குறிப்புகள் ‘பஞ்சும் பசியும்’ நாவலின் விதைகளாயின.

பொதுவுடமைக் கொள்கைக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட கம்பீர மனிதனாக உயர்ந்து நின்றவர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன். அவரது வழியில் நடைபோடுவதே கம்யூனிஸ்டுகளின் கண்ணான கடமை.

===பெரணமல்லூர் சேகரன் ===

;